லொறியொன்று புகையிரதத்தில் மோதியதில் நால்வர் பலி!!
Read Time:54 Second
அங்குலானை மற்றும் லுனாவ புகையிரத நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த புகையிரத பாதைக்கு சமாந்திரமான பாதையில் இருந்த லொறி பின்நோக்கி செலுத்திக்கொண்டிருந்த போது, கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி புகையிரதத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து நடத்துள்ளது.
புகையிரத மிதிப்பலகையில் சென்ற சிலரே விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்
Average Rating