டெல்லியில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 5 சிறுவன் பத்திரமாக மீட்பு!!
டெல்லியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 5 வயது சிறுவனை காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அதிகாலையில் மீட்டனர். டெல்லியில் தில்ஷாத் கார்டனைச் சேர்ந்த 5-வயது சிறுவனை கடந்த மாதம் 25-ம் தேதி காலை பள்ளிச்சென்ற போது ஹெல்மட் அணிந்து பைக்கில் வந்த இருவர் துப்பாக்கி முனையில் கடத்தினர். பின்னர் சிறுவனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட கடத்தல்காரர்கள் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் பதுக்கியிருந்த கடத்தல்காரர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர் சிறுவனை பத்திரமாக மீட்டனர். சிறுவனை மீட்பதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். ஒரு கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார். எஞ்சிய அனைவரும் சிறுவனை அங்கேயே விட்டு தப்பி சென்றனர். டெல்லியில் பட்டப்பகலில் பள்ளி சென்ற சிறுவன் கடத்தப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating