கற்பை காப்பாற்றிக்கொள்ள அட்வைஸ் செய்தவரிடம் மஞ்சிமா கடுப்பு !!
அச்சம் என்பது மடமையடா, இப்படை வெல்லும், சத்ரியன் படங்களில் நடித்திருப்பவர் மஞ்சுமா மோகன். மலையாளம். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மஞ்சிமா தெரிவித்த கருத்தில், ‘டெல்லி போன்ற பெரு நகரங்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதுபோன்ற கால சூழலில் நீங்கள் (பெண்கள்) அனைவரும் கையில் பெப்பர் ஸ்பிரேயை கொண்டு செல்வதுமட்டும் போதாது என அட்வைஸ் செய்திருந்தார்.
அதைக்கண்ட நெட்டீஸன்கள்,’எங்களுடைய தாழ்வான கோரிக்கை! சீக்கிரமே நீங்கள் திருமணம் செய்துகொணடால் உங்களது கற்பு தன்மையை காப்பாற்றிக்கொள்ள முடியும்’ என அட்வைஸ் தந்திருந்தார். கடுப்பான மஞ்சுமா அந்த ரசிகருக்கு பதிலடி தந்தார். ‘பலாத்காரத்துக்கு மாற்று வழி சீக்கிரம் திருமணம் முடித்துக்கொள்வதுதான் என்று தீர்வு சொன்னீர்கள் பாருங்கள் அதற்கு ஒரு பலே. சார், இது கன்னித்தன்மைபற்றிய பிரச்னை மட்டும் அல்ல. சுயமரியாதையும் அடங்கியிருக்கிறது’ என்றார். மஞ்சுமாவின் கருத்துக்கு பலர் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.
Average Rating