264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இளைஞர் கைது!!
சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் 09.02.2018 அன்று அதிகாலை வெலிமடை புகுல்பொல பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கழிவு தேயிலை தூளை கெப் ரக வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம் இல்லாமல் பதுளை வெலிமடை பிரதான வீதியில் அட்டம்பிட்டிய பகுதியிலிருந்து வெலிமடை பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளை், வாகனம் மற்றும் சந்தேக நபர் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating