நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் குறித்து மோகன்பகவத் அவதூறு பேச்சு : ராகுல்காந்தி கண்டனம்!!
ராணுவத்தை 3 நாட்களில் உருவாக்குவோம் என கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகாரில் நேற்று பேசிய மோகன்பகவத் ராணுவத்தை தயார்படுத்த மத்திய அரசுக்கு 7 மாத காலம் என்றார். ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் 3 நாட்களில் ராணுவத்தை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
அதற்கான சூழல் நாட்டில் ஏற்பட்டு அரசியலயமைப்பு சட்டம் அனுமதித்தால் ராணுவத்தை ஆர்எஸ்எஸை தயார் செய்யும் என்று மோகன்பகவத் கூறினார். இதற்கு டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல்காந்தி இந்தியர்களுக்கு இது ஒரு அவமரியாதை என்றார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை மோகன்பகவத் பேச்சு அவமரியாதையாக செய்ததாக அவர் கூறியுள்ளார். தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் வீரர்களை இழிவுப்படுத்திய மோகன்பகவத் வெட்கப்பட வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Average Rating