நேபாள நாட்டின் பிரதமராக சர்மா ஒலி மீண்டும் தேர்வு!!

Read Time:2 Minute, 5 Second

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டணியைச் சேர்ந்த சர்மா ஒலி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் நேபாள ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மற்றும் மாவோயிஸ்ட் சென்டர் கட்சிகள் அடங்கிய கூட்டணி 176 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மேல்சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. 6 மாகாணங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 59 இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்களையும் கைப்பற்றின. நேபாள காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், இதர கட்சிகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதனையடுத்து நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சி தலைவரான சர்மா ஒலி அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்மா ஒலி ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதியிலிருந்து, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நேபாள நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிக வயதான கொரில்லா 60 வயதில் மரணம்!!
Next post மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா?