புது வகை அணு ஆயுதம் தயாரிக்கிறது பாகிஸ்தான்!!
புதிய வகை அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது என அமெரிக்க செனட் குழுவில் உளவுத்துறை இயக்குனர் டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார். உலக அளவிலான அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க செனட் தேர்வு குழுவின் ஆய்வு கூட்டத்தில் அமெரிக்க உளவுப் பிரிவுத் தலைவர் டான் கோட்ஸ் பேசியதாவது: பாகிஸ்தான் புதிய வகை அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. குறுகிய தூர ஏவுகணைகள், கடலில் ஏவப்படும் ஏவுகணைகள், வானில் ஏவப்படும் ஏவுகணைகள், தொலைதூர ஏவுகணைகள் உட்பட பலவகை ஆயுதங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது.
இந்த புதிய வகை அணு ஆயுதங்கள் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், வடகொரியாவும் தொலைதூர அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. ஈராக், சிரியாவில் ரசாயன ஆயுதங்களை ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் ஏற்கனவே பயன்படுத்துகின்றனர்
உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் திறனும் வடகொரியாவிடம் நீண்ட காலமாக உள்ளது. அங்குள்ள உயிரி தொழில் அமெரிக்கா, அதன் படைகள் மற்றும் கூட்டணி நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை முறியடிக்க பேரழிவு ஆயுதங்களை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
* இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
* ஜம்முவில் உள்ள சஞ்சுவான் ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
* கடந்த 12ம் தேதி சிஆர்பிஎப் முகாமில் நடந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில், ஒரு ராணுவ வீரர் பலியானார்.
Average Rating