தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பெண்கள் உயிரிழப்பு!!
Read Time:1 Minute, 7 Second
தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தேவாலயத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிஸ்ல்யார் பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழிபாட்டை முடித்து வெளியே வந்தவர்கள் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு காவல்துறையினர் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் மர்மநபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்? எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினான் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
Average Rating