தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்பு!!

Read Time:1 Minute, 13 Second

மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 74 வயது மூதாட்டி இன்று (19) நண்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

“அவரது வீட்டு ஓடுகள் கழற்றப்பட்ட நிலையில் இருந்தன. அதனால் கொள்ளையர்களே மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அத்துடன், சடலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த 74 வயதுடைய த.இரத்தினதேவி என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரை மூன்று நாள்களாகக் காணவில்லை என்று அயலவர்கள் இன்று முற்பகல் தேடிச் சென்றுள்ளனர். அதன்போதே மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கையை தாயாராக்கிய அண்ணனுக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!!
Next post ஈரானில் மோசமான வானிலை காரணமாக நொறுங்கிய விமானத்தை கண்டறிவதில் சிக்கல்!!