7 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது!!
Read Time:52 Second
கல்பிட்டி, கந்தகுளியா கடற்கரையில் 7 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து படகு ஒன்றை சோதணை செய்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து 5 கோடி பெறிமதியான 7 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating