காங்கிரஸ் ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்தது கண்டனத்திற்குரியது : முதல்வர் நாராயணசாமி!!
உயர்பதவியில் உள்ள பிரதமர் மோடி புதுச்சேரி அரசு பற்றி விமர்சித்தது துரதிர்ஷ்டவசமானது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி குறித்து பிரதமர் மோடி விமர்சித்தது கண்டனத்திற்குரியது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். சரித்திரம் தற்போது மாறி வருகிறது. இதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என நாராயணசாமி பேட்டியளித்துள்ளார். கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மட்டுமல்ல எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது பிரதமர் முடிவு செய்ய வேண்டியது அல்ல, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் கூறினார். நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரிடம் கடிதம் வழங்கியுள்ளேன். மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு செலுத்த வேண்டிய கடனை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தினேன். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு ரூ 6,262.70 கோடி நிதி வேண்டும் என பிரதமர் மோடியிடம், கோரிக்கை மனு அளித்துள்ளேன் முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.
Average Rating