ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி பகுதியில் உள்ள உதானி குர்த் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் குமார். மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல், ஜோத்ஸ்னா படேல் படோஹி பகுதியில் மத்திய வரித்துறை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கோரக்பூர் மற்றும் லக்னோ ரயில் நிலையங்களுக்கு இடையே விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் பயணம் செய்தார்.
அப்போது அவரது முன்னிலையில், எந்த ஆடம்பரமும் இன்றி மிகவும் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்த ரவிசங்கர், பெரும் பொருட்செலவில், பல லட்சங்கள் செலவு செய்வதை விட இதுபோன்று எளிமையான திருமணங்களை வரவேற்கிறேன் என்றார்.
திருமணம் தொடர்பான புகைப்படங்களை புதுமண ஜோடியினர் தங்களது வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating