இரும்பு, அலுமினியத்துக்கு இறக்குமதி வரி அமெரிக்கா முடிவுக்கு சர்வதேச நிதியம் எதிர்ப்பு!!

Read Time:2 Minute, 6 Second

அமெரிக்காவில் உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை முறையே 25, 10 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார். இந்த வரி விதிப்புக்கு சர்வதேச நிதியமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் செய்தி தொடர்பாளர் கெர்ரி ரைஸ் கூறுகையில், “அமெரிக்க இறக்குமதி வரியால், மற்ற நாடுகளுக்கு மட்டுமின்றி, அமெரிக்காவின் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் இரும்பும், அலுமினியமும் அதிகமாக பயன்படுத்தும் நிலை உள்ளதால், இறக்குமதி வரியால் அவை அதிகளவிலான பாதிப்பை சந்திக்கும்.

இந்த முடிவை கைவிட்டு, அமெரிக்காவும் அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் இணைந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இது பற்றி டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘வர்த்தக போர்நல்லது. அமெரிக்கா பல நூறு கோடிகளை வர்த்தகத்தில் இழந்து வருகிறது. அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தக போரில் அமெரிக்கா வெற்றி பெறும். அமெரிக்காவையும், அமெரிக்க ஊழியர்களையும் காக்கும் முயற்சியாக இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா – வியட்நாம் இடையே இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம்!!
Next post புத்தளம் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி!!