(சினிமா செய்தி)ரீதேவி வரைந்த ஓவியங்கள் ஏலம்!!
Read Time:1 Minute, 8 Second
ஸ்ரீதேவி ஓவியம் வரைவதில் கை தேர்ந்தவர். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் ஏராளமான ஓவியங்களை அவர் வரைந்துள்ளார். ஆனால் அதை வெளி உலகில் கொண்டு வந்தது கிடையாது. பலமுறை பலர் கேட்டும் ஓவிய கண்காட்சிகள் நடத்த அவர் மறுத்துவிட்டார். ஆனால் இறப்பதற்கு ஓரிரு வாரங்கள் முன் தொண்டு நிறுவனம் கேட்டதால் தான் வரைந்த சில ஓவியங்களை கொடுத்திருக்கிறார்.
அதன் மூலம் கிடைக்கும் தொகையை சமூக சேவை பணிகளுக்கு பயன்படுத்த அவர் அனுமதி கொடுத்திருக்கிறார். இந்த தகவல் இப்போதுதான் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவியின் இந்த ஓவியங்கள் துபாயில் ஏலம் விட உள்ளனர். இதில் அவர் வரைந்த ஓவியங்கள் தலா ரூ.15 லட்சம் வரை விலை போகும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
Average Rating