பரீட்சை முடிவை பார்த்து தீக்குளித்த ஆசிரியை(உலக செய்தி) !!

Read Time:1 Minute, 46 Second

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொளவல்லம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஸ்ரீதுராஜ் (வயது 23). அரச பாடசாலை ஆசிரியை. கேரள அரசு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தியது. அதில் ஆசிரியை ஸ்ரீதுராஜூம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.

கடந்த வாரம் பரீட்சை முடிவுகள் வெளியானது. ஸ்ரீதுராஜ் ஓ.பி.எஸ். பிரிவை சேர்ந்தவர். 82 மதிப்பெண்கள் பெற்றால் ஆசிரியைக்கு தகுதி பெற்று விடுவார். ஆனால் அவர் 81 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். 1 மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி அடைந்தார்.

ஆசிரியர் தேர்வில் 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை எண்ணி ஸ்ரீதுராஜ் மன உளைச்சலுக்கு ஆளானார். விரக்தியில் இருந்த ஆசிரியை நேற்று (10) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கண்ணூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதுராஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்ணூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கி, போதைப்பொருட்களுடன் இருவர் கைது!!
Next post காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு!!