சும்மா வருமா வெற்றி, சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சி(சினிமா செய்தி)!!
சிவகார்த்திகேயன் இந்த பெயர் சினிமாவில் வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஒரு வரம் தான். எல்லோராலும் எல்லாம் முடியும் என நிரூபித்து காட்டியவர்.
பேசுபவர்கள் எளிதாக லக் என்று பேசி கடந்துவிடுவார்கள். ஆனால், அதிர்ஷ்டம் எப்போதும் உழைப்பவர்கள் பின் தான் வரும் என்பதற்கு சிவகார்த்திகேயேன் மட்டுமே ஓர் உதாரணம்.
தொலைக்காட்சி சப்போர்ட் என்பதெல்லாம் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் பொறாமை கொள்பவர்கள் கட்டும் கதை. தொலைக்காட்சியில் இருக்க வேண்டும் என்றால் வெறுமென சும்மா வந்து நின்றால் மட்டும் போதாது.
24 மணி நேரம் வரும் நிகழ்ச்சியில் தன் நிகழ்ச்சிக்கு என்று பெரிய ரசிகர்கள் படையை கொண்டு வந்தவர் சிவகார்த்திகேயன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவை விட பல கஷ்டங்களை இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் கடந்து வந்துள்ளார்.
ஒரு தொகுப்பாளர் வேலைக்கு கூட தன்னை தேர்ந்தெடுக்காததை எண்ணி, AVM ஸ்டூடியோ வாசலில் சிவகார்த்திகேயன் அழுதுக்கொண்டே வந்தார். தனக்கான வாய்ப்பிற்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தார்.
கிடைத்த வாய்ப்பில் தொகுப்பாளராக இருந்து பின் ஒரு நடன நிகழ்ச்சியில் கலக்கி, சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, காமெடியனாக கலக்கி மெல்ல ஹீரோவாக வந்து இன்று டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக ஜொலிக்கும் சிவகார்த்திகேயனுக்கு சும்மா கிடைக்கலங்க வெற்றி….
Average Rating