பெயரை பச்சை குத்திய ரசிகர் : நடிகை மெஹரீன் அதிர்ச்சி(சினிமா செய்தி) !!
நடிகைகள் தங்களது காதலன் பெயரை பச்சை குத்திக்கொள்கின்றனர். ரசிகர்களை பொறுத்தவரை நடிகர், நடிகைகளுக்கு கட்அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது என்று தங்களது ரசனையை வெளிப்படுத்துகின்றனர். சுசீந்திரன் இயக்கிய, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் நடித்தவர் மெஹரீன். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘நோட்டா’ தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மெஹரீன் இணைய தள பக்கத்திற்கு ஒரு ரசிகர் புகைப்படம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் மெஹரீன். கையில் அளவுகோள் (ஸ்கேல்)போல் மார்க் செய்துகொண்டு அதற்கருகே ஒன்றன்கீழ் ஒன்றாக மெஹரீன் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் பச்சை குத்தியிருந்தார். இதுகுறித்து மெஹரீன் கூறும்போது,’எவ்வளவுதான் என் மீது உங்களுக்கு அன்பு இருந்தாலும் அதற்காக உங்களை நீங்கள் காயப்படுத்திக்கொள்ளாதீர்கள். ரசிகர்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்’ என்றார்.
Average Rating