நடிகையாக நிறைய வசதிகள் அனுபவிக்கிறேன் : அனுஷ்கா வெளிப்படை பேச்சு(சினிமா செய்தி) !!

Read Time:2 Minute, 12 Second

நடிகை அனுஷ்கா சமீபகாலமாக தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லி வருகிறார். பிரபாஸுடன் காதல் என்ற பிரச்னையிலும் அவர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக, ‘எங்கள் இருவருக்கும் காதல் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் அதை ஏற்க மறுத்து இருவரும் சினிமாவில் ஜோடியாக இணைவதுபோல் வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவொருபுறம் இருந்தாலும் நடிகைகளின் வாழ்க்கைபற்றி அனுஷ்கா வெளிப்படையாக பேசினார். அவர் கூறியது: இந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்திருக்கிறது. அதுபோல்தான் நடிப்பும் ஒரு தொழில். நிறுவனங்களில் பெண்கள் வேலை செய்வதுபோல் படங்களில் நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனால் இது மிகவும் சிறப்பானது. சினிமாவை ரசிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள். இதில் நடிகையாக இருப்பது பெருமை.

கைநிறைய சம்பளம் வருவது மட்டுமல்லாமல் நிறைய வசதிகளும் இங்கு அனுபவிக்கிறேன். எல்லா வேலைகளிலும் கஷ்ட நஷ்டம் இருப்பதுபோல் நடிகர்-நடிகைகளுக்கும் அது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு நிலைக்கு உயர்ந்து விட்டால் நடிகைகளை ராணி மாதிரி பார்த்துக்கொள்வார்கள். எங்கள் பேச்சுக்கும் மதிப்பு இருக்கும். நாங்கள் என்ன சொல்கிறோம் என்று கவனமாக கேட்பார்கள். இதைவிட சிறந்த வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புண்களை ஆற்றும் பண்ணை கீரை(மருத்துவம் )!!
Next post பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல்(கட்டுரை)!!