கொஸ் மல்லியின் தலையில்லா முண்டம் மீட்கப்பட்டது!!
Read Time:1 Minute, 15 Second
கொலை செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர் கொஸ் மல்லியின் முண்டம் பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அகுணுகொலபெலெஸ்ஸ காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், கொஸ் மல்லியினுடைய முண்டம் அகுணுகொலபெலெஸ்ஸ நீதவான் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு குற்றவியல் பிரிவினால் இந்த உடல் அடையாளம் காணப்பட்டதுடன் சமீபத்தில் வாழைத்தோட்டம் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தலையினுடைய முண்டம் என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலதிக பரிசோதனைக்காக உடற்பாகங்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating