பாலியியல் தொல்லை புகார் ஜேஎன்யூ பேராசிரியர் ஜாமீனில் விடுவிப்பு( உலக செய்தி)!!
பாலியியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உயிரி அறிவியல் துறை பேராசிரயர் அதுல் ஜோகிரி. இவர் மீது இதே பல்கலையை சேர்ந்த மாணவிகள் 8 பேர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்தனர். வசந்த்கஞ்ச் போலீசிலும் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறி பல்கலை பதிவாளர் மற்றும் போலீசாருக்கு விளக்கம் கேட்டு மாநில பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அதுல் ஜோகிரியை போலீசார் நேற்று மாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஜாமீன் வழங்க கோரி பேராசிரியர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த குற்றவியல் நடுவர் ரித்து சிங், ஜோகிரிக்கு ஜாமீன் அளித்தார். ரூ.30,000 த்துக்கான பிணையை அவர் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating