ஆப்கானில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மனிதகுண்டு தாக்குதல் 29 பேர் உயிரிழப்பு(உலக செய்தி)!!
Read Time:1 Minute, 14 Second
ஆப்கானிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று சிறுபான்மை இனத்தவரான ஷியா முஸ்லிம்களின் புத்தாண்டான நவுருஸ் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று ஆப்கானில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஷியா முஸ்லிம்கள் நேற்று தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வழிபாடு நடத்திகொண்டிருந்தனர். அப்போது பொதுமக்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஊடுருவிய தீவிரவாதி ஒருவன், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினான். இதில் பொதுமக்கள் 29 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 18 பேர் காயம் அடைந்தனர்.
Average Rating