பேஸ்புக் நிர்வாகம் அறிவிப்பு மக்களின் தனிப்பட்ட தகவலை பாதுகாக்க புதிய நடவடிக்கை!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 21 Second
பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, தேர்தல்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இதற்காக பேஸ்புக்கில் தனி ‘செட்டிங்’ ஏற்படுத்தப்படும் எனவும் இதன் தலைமை அதிகாரி எரின் ஈகனும்,. துணை ஜெனரல் கவுன்சில் ஆஷில் பெரிங்கரும் பேஸ்புக் பிளாக்கில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பேஸ்புக்கில் பயனாளிகளின் தகவல் திருடப்படுவது குறித்து அடுத்த மாதம் 7ம் தேதி விளக்கம் அளிக்கும்படி பேஸ்புக் நிர்வாகத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘பேஸ்புக்கில் தகவல் திருட்டு நடப்பது பற்றி அடுத்த மாதம் 7ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
Average Rating