காட்டு யானையில் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு!!
Read Time:58 Second
காட்டு யானையின் தாக்குதலில் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டுக்கு முன்னால் முற்றத்தை சுத்தப்படுத்திக் கொண்டு பெண் மீது இவ்வாறு யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் தற்போது வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Average Rating