வடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு!!

Read Time:2 Minute, 11 Second

வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர்.

வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர்.

வட கொரியா – அமெரிக்க உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை மீண்டும் நடத்த முயற்சி எடுக்கப்படுகிறதாக தெரிகிறது.

ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருந்த உச்சிமாநாட்டை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் அது நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் உள்ள, கூட்டு பாதுகாப்பு பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என மூனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வட கொரியா – அமெரிக்கா உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற இருநாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து ஞாயிறன்று மூன் தெரிவிப்பார் என்றும் மூன்னின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்டப்படி வட கொரிய அதிபர் கிம்முக்கும் டிரம்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை குறைப்பது குறித்தும் அணு ஆயுதங்களற்ற கொரிய தீபகற்பம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு பெண்டாட்டிக்காரன்!!(வீடியோ)
Next post மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை!!