பிரபாஸை மறக்க முடியாமல் தவிக்கும் அனுஷ்கா !!(சினிமா செய்தி)

Read Time:2 Minute, 33 Second

பாகுபலி, பாக்மதி படங்களுக்கு பிறகு அனுஷ்கா புதிய படங்கள் எதையும் ஏற்காமலிருக்கிறார். அவருக்கு குடும்பத் தினர் திருமண ஏற்பாடு செய்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பிரபாஸும் அனுஷ்காவும்தான் பொருத்தமான ஜோடி, சினிமாவில் இணைந்தவர்கள் வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என ரசிகர்கள் இணைய தளத்தில் கமென்ட் பகிர்ந்து வந்தாலும் இருவரும் தங்களுக்குள் காதல் இல்லை, நட்பு மட்டுமே உள்ளது என்று கூறி வருகின்றனர். பிரபாஸ், அனுஷ்கா காதல் கிசுகிசுவை அனுஷ்கா குடும்பத்தினர் விரும்பவில்லை.

அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு அனுஷ்கா எதிர்ப்பு தெரிவிக்காதபோதும் பல மாப்பிள்ளைகளை வேண்டாம் என்று நிராகரித்தார். விடாப்பிடியாக மாப்பிள்ளை தேடும் படலத்தை குடும்பத்தினர் தொடர்வதுடன், திருமண தோஷம் நீங்குவதற்காக அனுஷ்காவை கோயில் கோயிலாக அழைத்து சென்று வருகின்றனர்.

இதுவொருபுறம் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரபாஷை பற்றி அனுஷ்கா பேசிய வண்ணமிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனுஷ்கா, மறக்காமல் பிரபாஸ்பற்றி நினைவுகூர்ந்தார். ‘பாகுபலி படத்தில் ஒரு காட்சியில் படகு தூரமாக நின்றுவிட அதில் ஏறுவதற்காக பிரபாஸ் என்னை தனது தோள்மீது நடக்க வைப்பார்.

ஒருவரது தோள்மீது நடப்பது சரியான விஷயமில்லை என்றாலும் அதுவே பாகுபலி (பிரபாஸ்), தேவசேனா(அனுஷ்கா) கதாபாத்திரங்கள் என்பதால் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்றார் அனுஷ்கா. இது பிரபாஸ் மீது அனுஷ்கா வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு என்றே ரசிகர்கள் கமென்ட் பகிர்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஞானசார தேரருக்காக வளையுமா சட்டம்?(கட்டுரை)
Next post லஞ்சம் கேட்ட காவலரின் கைகளை கட்ட முயன்ற வாகனஓட்டிகள்!!(வீடியோ)