அதர்வா படத்துக்கு போதை டைட்டில் ஏன்? (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 43 Second

அதர்வா நடித்திருக்கும் படம் ‘செம போத ஆகாதே’. பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். போதை என பொருள்வரும்படி டைட்டில் வைத்தது ஏன்? என்றபோது பதில் அளித்தார் இயக்குனர். அவர் கூறியது: செம போத ஆகாதே நெகடிவ் டைட்டில் இல்லை, பாசிடிவ் டைட்டில்தான். எதிலும் ஒரு அளவுடன் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் தவறாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.

ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். கமர்சியல் பொழுதுபோக்காக உருவாகியிருக்கும் இதில் நடனம், சண்டை காட்சிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அதர்வாவையும் இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் பார்க்கலாம். மிஷிலி, அனைகா சோலி கதாநாயகிகள்.

மேலும் மனோபாலா, கருணாகரன், யோகி பாபு, ஜான்விஜய், பிரின்ஸ், கும்கி அஸ்வின் என பலர் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. சமீபத்தில் இப்படத்தின் டீஸரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். அதற்கு பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே பாணா காத்தாடி படத்தில் இணைந்த அதர்வா, யுவன்சங்கர்ராஜா என்ற எங்களது கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொப்பன சுந்தரி பாட்டு !!(சினிமா செய்தி)
Next post உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள் பற்றி தெரியுமா? (வீடியோ)