யானை முத்துக்களை விற்க முயன்ற இராணுவ வீரர்கள் கைது!!

Read Time:1 Minute, 45 Second

யானை தந்தத்தில் இருந்து பெறப்பட்ட முத்துக்கள் மூன்றை விற்பனை செய்ய முற்பட்ட இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (29) பிற்பகல் இந்த சம்பவம் தொடர்பில் மூவரையும் தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதவாச்சி – போகஹாவெவ 5 ஆம் படையணியை சேர்ந்த கோப்ரல் ஒருவரும் லான்ஸ் கோப்ரல் ஒருவரும் மற்றும் அநுராதபுரம் கெமுனுபுர சிவில் பாதுகாப்பு முகாமில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கோப்ரல் கிரிஉள்ள – மொதகொள்ள பகுதியை சேர்ந்தவர் எனவும், லான்ஸ் கோப்ரல் மொரவெவ – மஹாதிவுள்வெவ பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் மொரவெவ – மஹாதிவுள்வெவ பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் குறித்த முத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்ற விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதாநாயகியான திருநங்கை… !!(சினிமா செய்தி)
Next post வொர்க் அவுட்!!(மகளிர் பக்கம்)