மத்தியப் பிரதேசத்தில் 4 வயது சிறுமி பலாத்காரம்: மேல்சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைப்பு!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 14 Second
மத்தியப் பிரதேசம்: மத்தியப்பிரதேசம் மாநிலம், சட்னா மாவட்டத்தில் 4 வயது சிறுமி, தனது பெற்றோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த இளைஞன் அச்சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துவிட்டு புதரில் வீசிச் சென்றுள்ளான். இதனையடுத்து சிறுமியை தேடிய பெற்றோர், ரத்த காயங்களுடன் மோசமான நிலையில் சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இன்று அச்சிறுமி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Average Rating