கைலாஷ் யாத்திரை சென்று நேபாளில் சிக்கியுள்ள 525 இந்தியர்களில், 104 பேர் மீட்பு!(உலக செய்தி)
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளத்துக்குச் சென்று, கனமழையால் திரும்பி வர முடியாமல் தவித்த 104 இந்தியர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில், சிமிகோட் பகுதியில் மேலும் 5 சிறிய ரக விமானங்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசின் முயற்சியால் நேபாள அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். உத்தரகாண்ட், சிக்கிம் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது.
இதில், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். கடந்த வாரம் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய பக்தர்கள், கனமழை காரணமாக நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகின. அங்கு சுமார் 1,300 பக்தர்கள் தங்குவதற்கு போதிய வசதியின்றி, உணவு பற்றாக்குறையுடன் இருப்பதாக கூறப்பட்டது.
இதில், சுமார் 525 பேர் இந்தியர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்த 300 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பக்தர்களை காத்மாண்டு வருவதற்கான அனைத்து விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவதாக பக்தர்கள் தங்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிமிகோட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating