நேபாளத்தில் சிக்கி தவித்த கைலாஷ் பக்தர்கள் மீட்பு!!
Read Time:1 Minute, 10 Second
நேபாளத்தில் தொடர்மழையால் சிக்கிக் கொண்ட கைலாஷ் மானசரோவர் பக்தர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. கைலாஷ் மானசரோவர் செல்வதற்கான வருடாந்திர யாத்திரை கடந்த மாதம் 8ம் தேதி துவங்கியது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் நேபாள அரசின் உதவியுடன் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டது. கடந்த சில தினங்களாக மீட்புப்பணியில், நேற்றுடன் மொத்தம் 1,430 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
Average Rating