பெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு!!(உலக செய்தி )
Read Time:1 Minute, 1 Second
டெல்லியில், சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெறும் ஒரு பெண், நேற்று முன்தினம் நள்ளிரவு, பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அதே நீதிமன்றின் மூத்த வழக்கறிஞராக தொழில் செய்யும் 50 வயதை தாண்டிய ஒருவர், நீதிமன்றில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் மதுபோதையில் தன்னை கற்பழித்து விட்டதாக அவர் கூறினார்.
இதனால், மூத்த வழக்கறிஞரை பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அறையை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
Average Rating