மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 38 Second

பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே, இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெலண்டிங் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவானது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் நேற்று மாலை மீண்டும் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தோனேசியாவின் லம்போக் நகரில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க!!(வீடியோ)
Next post வௌ்ளத்துக்கு மத்தியில் அகதி முகாமில் நடைபெற்ற திருமணம்!!(உலக செய்தி)