இந்தோனேஷியாவில் மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகப் புகாரளித்த பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறை!!
Read Time:1 Minute, 6 Second
இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகப் புகாரளித்த பெண்ணை இறை நிந்தனை வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த மெய்லியானா என்பவர் புகாரளித்தார்.
இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து சுமத்ரா தீவில் 14 புத்த மதக் கோயில்களும், அங்கிருந்த சிலைகளும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. இதுகுறித்த விசாரணை நடைபெற்ற நிலையில் 44 வயதான மெய்லியானாவை இறை நிந்தனை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating