பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 16 Second
கலிஃபோர்னியா: பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வீணாகி இருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் நிகழ்ந்த இயற்க்கை பேரிடர்களால் சுமார் 215 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஐநாவின் இயற்கை பேரிடர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இதில் 77 சதவீதம் பணம் மோசமான வானிலையாலும், பருவநிலை மாற்றத்தினால் வீணாகி இருப்பதாக கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரின்போது ஏற்படும் சேதங்கள், வணிக ரீதியிலான பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.
Average Rating