கோர விபத்து – 14 பேர் பலி – 30 இற்கும் அதிகமானோர் காயம்!!( உலக செய்தி)
Read Time:1 Minute, 20 Second
சீனாவின் எக்ஸ்பிரஸ் வீதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லொறி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating