காவல்துறை மா அதிபரின் தலைமையில் சமரச மாநாடு
Read Time:1 Minute, 3 Second
பொத்துவிலில் நேற்று ஏற்பட்ட பதற்றத்தையடுத்து காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ நேற்று பொத்துவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்தார். பொத்துவிலில் படுகொலை நிகழ்ந்த இடத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளை அறிந்து கொண்ட அவர் பின்னர் உயர்மட்ட சந்திப்பொன்றை அங்கு நடத்தினார். இந்த சந்திப்பில் பிரதி காவல்துறை மா அதிபர்களான மஹிந்த பாலசூரிய, வசந்த டி.சில்வா, அம்பாறை மாவட்ட பாதுகாப்புக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பெரமுகா ஆகியோரும் பங்கேற்றனர். மயோன் முஸ்தபா எம்.பி. பேஸ் இமாம் மௌலவி ஆதம்பாவா மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனார்.