வினாத்தாள் வெளியானதால் பரீட்சை ரத்து!!(உலக செய்தி)

Read Time:1 Minute, 27 Second

குஜராத் மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.

இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் பொலிஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இன்று நடைபெற இருந்த பொலிஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வினாத்தாள் வெளியானதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறுகையில், ஆளும் கட்சி இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது என குற்றம் சாட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.?(வீடியோ)
Next post கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!( மகளிர் பக்கம் )