காதலரை கரம்பிடித்தார் நடிகை! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 54 Second

இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுவேதா பாசு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மை, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார்.

சமீபத்தில் ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் சுவேதா பாசு சிக்கினார். சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் தங்கி இருந்துவிட்டு வீடு திரும்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவேதா பாசுவுக்கு பட வாய்ப்பு அளிக்க சில இயக்குனர்கள் முன்வந்தனர். தொடர்ந்து படங்களில் நடித்தார்.

இந்த நிலையில், சுவேதா பாசுவுக்கும் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இருவீட்டு பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்தது. பின்னர் இருவரும் பாலி தீவுக்கு ஜோடியாக சென்றனர். அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சுவேதா பாசு – ரோகித் மிட்டல் திருமணம் புனேவில் பெங்காலி முறைப்படி நேற்று நடந்தது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமம் என்பது என்ன?(அவ்வப்போது கிளாமர்)
Next post அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா !! (உலக செய்தி)