ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி!! (உலக செய்தி)
சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு முழு அதிகாரத்தையும் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர்.
ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்.
தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள மகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது
தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன், எந்த தொகுதி என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.
Average Rating