பேருந்து விபத்தில் 6 பேர் பலி!! (உலக செய்தி )
Read Time:1 Minute, 22 Second
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் இருந்து அலகாபாத் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானொர் பயணம் செய்தனர்.
கல்யாண்பூர் பகுதியில் உள்ள மவ்ஹர் கிராமத்தின் அருகே வந்தபோது, பேருந்தின் டயர் பஞ்சரானது. இதனால் நிலைகுலைந்து போன பேருந்து எதிரே வந்த சிமெண்ட் லொரி மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் அரசு பேருந்தும், லொரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating