வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி – 47 பேர் படுகாயம்!! (உலக செய்தி)
Read Time:1 Minute, 3 Second
ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமாஎ 20 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கனமழையால் சுமார் 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 7 ஆயிரத்து 700 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating