மோடியை கொல்வதற்கு கூலிப்படை – நபர் கைது!! (உலக செய்தி)
Read Time:1 Minute, 8 Second
பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு கூலிப்படை ஆளாக செயல்பட விருப்பம் வெளியிட்டு, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவு வெளியிட்டார். அவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வரும் நவீன் குமார் யாதவ் (வயது 31) ஆவார்.
அவர் அந்தப்பதிவில், “மோடியை கொல்வதற்கு என்னிடம் சரியான திட்டம் உள்ளது. என்னை யாரேனும் அமர்த்திக்கொள்ள ஒப்பந்தம் போட தயாரா?” என கேட்டுள்ளார்.
இது பற்றி பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் போனது, அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இதை ஜெய்ப்பூர் கிழக்கு பொலிஸ் துணை கமிஷனர் ராகுல் ஜெயின் நேற்று தெரிவித்தார்.
நவீன் குமார் யாதவ் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
Average Rating