தரமான உயிரணுக்களை தேர்வு செய்யலாம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 28 Second

குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைச் செல்வம் அளிக்க இன்றைய நவீன மருத்துவத்தில் ஏகப்பட்ட வழி முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இக்ஸி. இந்த முறையில் குழந்தையை உருவாக்கித் தரலாமே தவிர, அதன் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை. ‘‘குழந்தையை உருவாக்கித் தருவதோடு மருத்துவரின் கடமை முடிந்து போவதில்லை. அந்தக் குழந்தையை உருவாக்கும் உயிரணுவானது ஆரோக்கியமானதா எனக் கண்டுபிடிப்பதும் அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘‘சோதனைக்குழாய் முறையில் பல உயிரணுக்களைச் செலுத்தி கருமுட்டையுடன் இணையச் செய்வார்கள். ஆனால், இக்ஸி முறையில், விந்துப்பையில் இருந்து ஆணின் நல்ல ஒரு உயிரணுவை எடுத்து, பெண்ணின் கருமுட்டையில் துளையிட்டு அதில் ஊசி மூலம் உயிரணுவைச் செலுத்தி கரு உருவாக்கம் செய்வார்கள். இக்ஸி முறையில் குழந்தையின்மைக்கான சிகிச்சை அளிக்கிற போது, உயிரணுவா னது நகரும் தன்மை கொண்டதா என்பது மட்டுமே பார்க்கப்படும்.

இக்ஸி முறையில் ஒரு குறைபாடு இருந்தது. அதாவது, ஊசி மூலம் செலுத்தப்படும் விந்து அணுக்களில் குறைபாடு இருந்தால்கூட, கண்டறிய முடியாது. குறையுள்ள விந்து அணுவால் குழந்தையை உருவாக்க முடியாது என்பதால் சிகிச்சை அளித்தும் பயன் இருக் காது. இந்தக் குறைபாட்டைக் களைந்து நவீனத்துவம் பெற்றிருப்பதுதான், இம்ஸி சிகிச்சை. இந்த நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒவ் வொரு விந்து அணுவையும் 4,000 மடங்கு உருப்பெருக்கிப் பார்க்க முடியும். அதனால் குறைபாடு உள்ள விந்தணுக்களை நீக்கிவிட்டு நல்ல ஆரோக்கியமான விந்து அணுக்களை மட்டும் தேர்ந்தெடுத்து, கருக்குழாயில் செலுத்த முடியும்.

இதனால் வெற்றி வாய்ப்பும் பல மடங்கு அதிகரித்து உள்ளது. ஆனால், அந்த உயிரணுவில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக ஒய் க்ரோமோசோமில் பிரச்னைகள் இருந்தால், அது அந்தக் குழந்தைக்கும் தொடர்ந்து பாதிக்கும். உயிரணுவின் தோற்ற த்தை மட்டுமே வைத்து, அதைக் கணிக்க முடியாது. ஒருவேளை அந்த குறைபாடு உடைய அணுவாக இருந்தால், மரபணுக் கோளா றுகளின் காரணமாக உருவாகிற பிரச்னைகள் வரலாம். கருச்சிதைவு ஏற்படலாம். குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கலாம். ஆண் உயி ரணுக்களில் குறைபாடுகள் இருப்பதால் உண்டாகிற மலட்டுத் தன்மை கிட்டத்தட்ட 45 சதவிகிதம்.

நல்ல உயிரணுக்களைக் கண்டுபிடிக்க இன்றைய நவீன மருத்துவத்தில் சில முறைகள் இருக்கின்றன. எலெக்ட்ரோஃபோரெடிக் முறை யில் தரமான, ஆரோக்கியமான உயிரணுக்களைக் கண்டு பிடித்து, பிறகு அவற்றை ஸ்பெர்ம் வாஷ் முறையில் சுத்தப்படுத்தி, வடிகட்டி, இறுதியாக அவற்றில் சிறந்த அணுக்களைக் கருவாக்கத்துக்குப் பயன்படுத்துவோம். விதைப் பையில் விந்து அணு உருவாவதற்கு முற் பட்ட நிலையிலேயே, அதனைப் பலமானதாக மாற்றிக் கருவினை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்துவிட் டது. அதே போல பெண்ணின் கருவறையில் இருந்து வெளிவரும் கரு முட்டைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அதில் விந்து அணுக்களை செலுத்திக் கரு உருவாக்க முடியும்.

ஆனால், இப்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து உறை நிலையில் வைத்து முறைப்படி பாதுகாத்துப் பின்னர் கருத்தரிக்க வைக்கும் அளவுக்கு, சிகிச்சை வளர்ந்துவிட்டது. இது தவிர, வளராத கரு முட்டையைப் பெண்ணின் கருப்பையில் இருந்து எடுத்து, கணவனின் விந்து அணுவுடன் சேர்த்து வெளியில்வைத்து ஒன்றாக்கிய பிறகு, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் செலுத்தும் நவீன சிகிச்சைகளும் இப்போது வந்துவிட்டன…’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் !! (அவ்வப்போது கிளாமர்)
Next post பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..? (அவ்வப்போது கிளாமர்)