இதெல்லாம் தெரிஞ்சா ஆரஞ்சை மிஸ் பண்ணவே மாட்டீங்க!!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 49 Second

கண்ணைக் கவரும் நிறம் கொண்ட, விலையிலும் சற்றுக் குறைவான, உறிப்பதற்கும் சுலபமாக இருக்கும்(!)பழமான ஆரஞ்சு சத்துக்களைத் தருவதிலும் சிறப்பான பல குணங்களைக் கொண்டது என்பது தெரியுமா? உணவியல் நிபுணர்புவனேஸ்வரி சொல்லும் ஆரஞ்சு பெருமைகளைக்கேட்டால் இனி ஆரஞ்சு பழத்தை மிஸ் பண்ணவே மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

* ஒரு ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் – 47%, நீர்ச்சத்து – 87%, புரதம் – 0.9 கிராம், கார்போஹைட்ரேட் – 11.8 கிராம், சர்க்கரை – 9.4 கிராம், ஒமேகா 6 – 0.02 கிராம், வைட்டமின் A – 11 மை.கி, வைட்டமின் சி – 53.2 மிகி., வைட்டமின் E – 0.18 மி.கி, வைட்டமின் பி1(தயாமின்)- 0.09 மி.கி, வைட்டமின் B2(ரிபோஃப்ளேவனாய்டு) – 0.04 மி.கி, வைட்டமின் B3(நியாஸின்) – 0.28 மி.கி, வைட்டமின் B5- 0.25 மி.கி, வைட்டமின் B6(பிரிடாக்சின்)- 0.06 மி.கி, போலேட் – 30 மை.கி, கால்சியம் – 40 மி.கி, இரும்புச்சத்து – 0.1 மி.கி, மெக்னீசியம் – 10 மி.கி, பாஸ்பரஸ் – 14 மி.கி, பொட்டாசியம் – 181 மி.கி, துத்தநாகம் – 0.07 மி.கி, காப்பர் – 0.05 மி.கி, மாங்கனீசு – 0.03 மி.கி, செலினியம் 0.5 மை.கி என ஓர் ஊட்டச்சத்துக்களின் பெரும்புதையலே காணப்படுகிறது.

* குறைவான கொழுப்புச்சத்து கொண்டதாகவும், மிகுந்த நார்ச்சத்து கொண்டதாகவும் இருப்பது ஆரஞ்சு பழத்தின் மற்றொரு சிறப்பு. இதனால் உடலின் தேவையற்ற கொழுப்பு அளவை குறைக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது ஆரஞ்சு.

* ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஃப்ளேவனாய்டுகள், ஹெஸ்பெரிடின் போன்ற சத்துக்கள் இதய நலனைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

* தொடர்ந்து நான்கு வாரம் ஆரஞ்சு பழம் உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும்என்பது பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் உறுதியாகி இருக்கிறது.

* வைட்டமின் சி, வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது ஆரஞ்சு. மேலும், மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும் குணமும் கொண்டதாக விளங்குகிறது ஆரஞ்சு.

* ஆரஞ்சு பழம் வெள்ளை அணுக்களை ரத்தத்தில் அதிகமாக உற்பத்தி செய்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கிறது. நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் அல்சரை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கிறது.

* இன்றைய தேதியில் அதிகரித்து வரும் புற்றுநோயை எதிர்க்க சரியான மருந்து ஆரஞ்சுதான். ஆரஞ்சு பழத்தில் காணப்படும் D-linonene புற்றுநோய்க்கு எதிராக போராடும் வல்லமை கொண்டது. ஆரஞ்சு பழத்தைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்று, தோல்புற்று, மார்பகப்புற்று போன்றவற்றை வராமல் தடுக்க முடியும்.

* ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அதிகம் கொண்ட ஆரஞ்சு உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது, புத்துணர்வும் அளிக்கிறது.

* ரத்தத்தில் சிவப்பணுக்களையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச்செய்து ரத்தசோகை பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது ஆரஞ்சு. இதில் உள்ள போலோலைட்ஸ் மற்றும் பாலிபெனால்ஸ் போன்ற சத்துக்கள் வைரஸ் தொற்று வராமல் பாதுகாக்கிறது.

* ஆரஞ்சு பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. உணவு வேளைக்குப் பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலிரவு குழப்பங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சூரிய நமஸ்காரம் !! (மகளிர் பக்கம்)