சிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்!! (மகளிர் பக்கம்)
மருத்துவ பரிசோதனையில் மிக முக்கிய பங்கு வகிப்பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். அல்ட்ரா ஸ்கேன் மூலம் நோயாளிகளின் உடல் உறுப்புகளின் தன்மையை அறிந்து கொள்ளலாம். உடலில் ஏற்படும் நோய்களை எளிதில் கண்டறிய இந்த பரிசோதனை மிகவும் உதவுகிறது. கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், கர்ப்பப்பை ஆகியவற்றை அறிய உதவுகிறது. டாப்ளர் பரிசோதனையில் உடலில் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் வேக மாற்றம், அடைப்பு மற்றும் வீக்கம் முப்பரிமாண முறையின் மூலம் கட்டிகளின் அமைப்பு, கருவில் உள்ள குழந்தைகளின் கை, கால், முகம், ஆகியவற்றை காணமுடியும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவுற்றிருக்கும் பெண்ணின் குழந்தை கருவில் அதாவது ரத்தக் கசிவு, குழந்தையின் அசைவு தெரியாதபோது அதனை அறிய உதவுகிறது. மேலும் குழந்தையின் மூளை, இருதயம், சிறுநீரகம், மேல்வயிறு, குழந்தையின் வளர்ச்சி, சரியான அளவு வளர்ந்து உள்ளதாக ஆகியவற்றை அறியவும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவுகிறது. பரிசோதனைக்கு வரும் போது சிறுநீர் கழிக்காமல் 1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பித்தப்பை பார்ப்பதற்கு குறைந்தது 6 மணி நேரம் உணவு அருந்தக்கூடாது. பல சிறப்பு அம்சங்களை கொண்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மருத்துவ ஆலோசனையை பெறவும்.
Average Rating