அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 22 Second

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பது மிகவும் பிரபலமாகி விழிப்புணர்வு அடைந்திருக்கும் அதே அளவு முக அழகு, கூந்தல் அழகு, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் என்பதும் மிகவும் முக்கியமாகி வருகிறது. அந்த வகையில் முக அழகு, சரும பளபளப்பு போன்றவற்றிற்கெல்லாம் மாத்திரை எடுத்துக் கொள்வது போல கூந்தல் பிரச்னைகளுக்கும் பயோட்டின் போன்ற மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த வகை பயோட்டின் மாத்திரைகள் எதற்கு பயன்படுகிறது அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி விளக்குகிறார் டயட்டீஷியன் கோமதி கௌதமன்.

பயோட்டின் என்பது…

நமது உடலுக்கு அதிகப்படியான புரதச்சத்து தினந்தோறும் தேவைப்படுகிறது. புரதம் அதிகம் நிறைந்துள்ள உணவு வகைகளை நாள்தோறும் எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புரதம் பற்றாக்குறையாகவே கிடைக்கிறது. புரதச்சத்து சரியான அளவு உடலுக்கு கிடைக்காவிட்டால் உடலுக்கு தேவையற்ற பிரச்னைகள் வருகிறது. உதாரணத்திற்கு முடி உதிர்வு ஏற்படும். இதை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் அதிகப்படியான முடி உதிர்ந்துவிடும்.

பயோட்டின்(Biotin) என்பது புரதச்சத்து மிகுந்துள்ள ஒரு மாத்திரை. உடலில் புரதச்சத்து குறையும்போது இந்த வகை பயோட்டின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது புரதம் முழுவதுமாக கிடைத்து விடுகிறது. இது முட்டையின் வெள்ளைப் பகுதி, மீன், சிக்கன், முளைகட்டிய பயறு வகைகள் போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றில் இருந்து பெறப்பட்டதுதான் பயோட்டின் மாத்திரை.

பயோட்டின் மாத்திரைகள் முடி உதிர்வு பிரச்னைகள் மற்றும் புரதச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் பயன்படுத்தலாம். உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், கட்டமைக்கவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, முடி உதிர்வைக் குறைத்து கட்டுக்குள் கொண்டு வருவதில் இந்த மாத்திரைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எந்தெந்த உணவு வகைகளில் புரதம் அதிகம் நிறைந்துள்ளது?

அசைவ உணவுகளான மீன், கோழி, முட்டையின் வெள்ளைப் பகுதி போன்றவற்றில் புரதம் மிகுந்துள்ளது. தொடர்ந்து முட்டையின் வெள்ளைப் பகுதியை எடுத்துக்கொள்வதன் மூலம் புரதம் தொடர்பான பிரச்னைகள் குறைந்துவிடும். முளைகட்டிய பயறு, முளைகட்டிய கொண்டை கடலை, பாதாம், வால்நட் போன்றவற்றில் அதிகம் புரதம் நிறைந்துள்ளது. சைவ உணவுக்காரர்கள் தொடர்ந்து முளைகட்டிய பயறு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பயோட்டின் வகை மருந்துகளால் பக்க விளைவுகள் உள்ளதா?

நம் முன்னோர் காலத்தில் உணவிலேயே அனைத்து சத்துகளும் நமக்கு கிடைத்தது. எந்தவித சத்தும் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதனால் எந்த பிரச்னைகளும் ஏற்படவும் இல்லை. வயது அதிகரிப்பின் பிறகே பிரச்னை ஆரம்பிக்கும். ஆனால், இன்றைய தலைமுறையின் உணவுப் பழக்கத்தில் சரியான சத்துகள் நிறைந்துள்ளனவா என்பது கேள்விக்குறியே.

அதன் காரணமாக 20 வயதின் தொடக்கத்திலேயே அனைத்து சத்துக் குறைபாடும் ஏற்பட ஆரம்பிக்கிறது. புரதச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அதனை சமன்படுத்த இயற்கையான முறையில் உணவுமுறை மாற்றத்தை மேற்கொள்வதே சிறந்தது. அப்படி இயலாத பட்சத்தில் பயோட்டின் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த வகை மருந்துகள் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் இனி வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்களும் இதனால் பயனடைய முடியுமா?

மருத்துவரின் ஆய்விற்குப்பிறகு புரதக் குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்வுக்கு பயோட்டின் பரிந்துரைக்கப்படுகிறது. வழுக்கை விழுபவர்கள் இந்த பயோட்டினால் பயனடைய முடியுமா என்பது கேள்விக்குறியே. வழுக்கையையும் இது குணப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் அறிந்து கொள்ள முடியும். இது சம்பந்தமான ஆய்வுகள் இன்னும் வரவில்லை. ஆனால், பொடுகு தொல்லையால் முடி உதிர்வை சந்திப்பவர்களுக்கு முதலில் பொடுகிற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். பிறகு பயோட்டின் பரிந்துரைக்கப்பட்டு முடி உதிர்வு குறைய ஆரம்பிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயதானாலும் மகனுக்கு போட்டியாக அழகாக இருக்கும் பிரபல நடிகர்கள்!! (வீடியோ)
Next post கர்ப்பகால வலிகள்! (மகளிர் பக்கம்)