இந்தியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி!! (உலக செய்தி)
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 மாணவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.
நேற்று மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 மாணவர்கள் சிக்கி பரிதாபமாக பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது.
தீயிலும், புகையிலும் சிக்கிய மாணவ- மாணவிகள் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார்கள். சிலர் ஜன்னல் வழியாக கீழே இறங்கி தப்பிக்க முயன்றனர்.
அப்போது உயிர் பிழைப்பதற்காக சிலர் 4-வது மற்றும் 3-வது மாடிகளில் இருந்து கீழே குதித்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் 20 மாணவ-மாணவிகள் பலி ஆனார்கள். இவர்களில் சிலர் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் இறந்தனர். சிலர் கீழே குதித்ததால் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
Average Rating