நாள்தோறும் பா.ஜனதாவை எதிர்த்து போராடுவோம்!! (உலக செய்தி)
பா.ஜனதாவை எதிர்த்து நாள்தோறும் போராடுவோம் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் 44 மக்களவை எம்பி.க்களை பெற்று பா.ஜனதாவை எதிர் கொண்டோம். தற்போது 52 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் நாம் நாள் தோறும் பா.ஜனதாவை எதிர்த்து போராடுவோம்.
நீங்கள் (எம்.பி.க்கள்) ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு இந்திய மக்களுக்காக போராடுகிறீர்கள். வெறுப்புணர்வை தூண்டுபவர்களும், கோபத்தை ஏற்படுத்துபவர்களும் உங்களை எதிர்த்து நிற்கிறார்கள். இதனால் நீங்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும்.
கட்சியை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். நாம் கடும் முயற்சி செய்து புத்துணர்வு அடைவோம். நம்மால் அதை செய்ய முடியும்.
எம்.பி.க்கள் குழு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட சோனியாவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Average Rating