மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 38 Second

உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த நிலையில் உலகிலேயே மிக நீண்ட கடல்பாதையை கொண்ட கனடா மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ‘‘2021-ம் ஆண்டு முதல் கனடாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘கனடாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான பிளாஸ்டிக் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன’’ என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை!! (உலக செய்தி)
Next post சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்! (மகளிர் பக்கம்)