ஹெரோயின் வைத்திருந்த 36 வயது பெண் கைது !!
Read Time:1 Minute, 17 Second
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
இந்த சோதனை நடவடிக்கை நேற்று (17) நடத்தப்பட்டதுடன், குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் மற்றும் 250 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண் திஸ்ஸா மாவத்த, பமுனுகம பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் இன்று (18) ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating